சென்னையில் உள்ள மாதவரம் சின்ன சேக்காடு என்ற பகுதியில் காற்று புகும் வகையில், மக்கும் குப்பைகளை பதனிடும் நிலையம் ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவில் காய்கறி மற்றும் பழக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு, இயற்கை உரமானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், எந்திரங்களின் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. மேலும் அதனை திறந்தவெளியில் வைத்து காய வைக்கின்றனர். இதன் பிறகு, அவற்றை சலித்து உரமாக மாற்றி அமைக்கின்றனர். […]
