தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார். […]
