அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதால் தொண்டர்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்து சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை […]
