தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைத்த குழுவுக்கு எதிரான கரு.நாகராஜன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இதற்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இரட்டை […]
