ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]
