ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஹைதராபாத்தில் கூறியது, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிவசங்கர் பாபு, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் திருமண இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். அவர் விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே தொடர்பு கொண்டு […]
