திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்சியல் தமிழில் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழகத்தில் அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் […]
