தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]
