லடாக்கில் ஒருவர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 17 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள சிகரத்தில் புஷ்-அப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படையின் மத்திய மலையேறும் குழுவினர் லடாக்கில் உள்ள ஒரு மலை சிகரத்தில் முதன் முறையாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தோ- திபெத்திய எல்லை காவல் கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனல் (வயது 55) லடாக்கில் 17,500 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறியுள்ளார். […]
