கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் கிறிஸ்துமஸை முன்னிட்டு வீட்டில் சிலர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மிரட்டிய பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்த ஆண்களை பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல ஊர்களில் கிறிஸ்துவ வழிபாடு நடக்கும் இடங்களில் இதுபோன்று அத்துமீறி நுழைந்து அதை தடுக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன. […]
