இந்திய முன்னாள் கால்பந்து அணி கேப்டன் சமர் ‘பத்ரு’ பேனர்ஜி காலமானார். இவருக்கு வயது 92. இவர் 1956ல் நடைபெற்ற மெல்பர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெறவைத்தார். பல்வேறு உடல்நலக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.
