மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு மேடையின் கீழே அமர்ந்திருந்த குவாலியர் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் கீழே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மேடையின் மீது ஏறி அமரேந்திர ராவை தாக்க, அவரும் பதில் தாக்குதல் நடத்தினார். இதனால் கூட்டத்தில் அடிக்கடி, கைகலப்பு என பரபரப்பு நிலவியது. […]
