Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் பேச்சு…. வலியுறுத்தப்பட்ட கோரிக்கை…. வெளியான தகவல்…..!!!!

ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாட்டு தலைவர்கள் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் வாயிலாக தீர்வுகாண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் அதிபர் புதினின் இந்திய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி அதிபர் ஷேக் முகமதுவுடன்…. பிரதமர் மோடி திடீர் ஆலோசனை….!!!

அபுதாபியில் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையித்தை இந்திய பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இவர்கள் 2 பேரும் ஆலோசனை நடத்தினார். அதாவது இரு நாட்டிற்கு இடையே உள்ள உறவு, வர்த்தக உறவு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் அமீரக அதிபரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

இன்று(ஜூன்.28) ஐக்கிய அரபு அமீரகம் போகும் இந்திய பிரதமர்…. வெளியான தகவல்…..!!!!!

ஜெர்மனியின் எல்மாவ்நகரில் ஜி 7 மாநாடு 2 தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனிக்கு சென்றார். இதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற மோடி, பின் ஐக்கியஅரபு அமீரகத்திற்கு இன்று புறப்படுகிறார். அதன்பின் அங்கு ஐக்கியஅரபு அமீரக அதிபர் ஷேக்முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார். அதனை தொடர்ந்து மோடி, ஐக்கியஅரபு அமீரகத்தின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Categories
உலக செய்திகள்

இந்திய கடைகளை ரஷ்யாவில் தொடங்க பேச்சுவார்த்தை…. விளாடிமிர் புடின் தகவல்…!!!!

பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார். 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியான சூழலில்…. உதவி புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி…. -இலங்கையின் புதிய பிரதமர்…!!!

இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாடு நிதி நெருக்கடியில் சிக்கியபோது உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. மேலும், அரசியல் குழப்பங்களும் போராட்டங்களும் நிலையை மேலும் மோசமடைய செய்தது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடந்த புதன்கிழமை அன்று பேசிய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி சாதனை…. எதில் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடி, யூடியூபில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் சேனலில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். உலக தலைவர்களிலேயே, யூட்யூப் தளத்தில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆம் வருடத்தில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், நரேந்திர மோடி யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார். இவரின் சேனலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடந்த நேர்காணல் […]

Categories
உலக செய்திகள்

“ஜி-20 மாநாடு தொடங்குகிறது!”.. பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார். இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி… வெளியான முக்கிய தகவல்..!!

ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரம், அதனால் உலகம் மற்றும் பிராந்தியம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்…. கோரிக்கை விடுத்த இந்திய பிரதமர்…. பிரபல நாடுகளில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி….!!

இந்தியத் தூதரகத்தின் சார்பாக அபுதாபியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகத்தின் சார்பாக அபுதாபியில் சர்வதேச யோகா தினத்திற்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு இந்தியாவின் தூதரான பவன் கபூர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் இந்திய தூதரகத்தின் […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் பொறுப்பானவர்கள்!”.. நரேந்திர மோடியை புகழ்ந்த ரஷ்ய அதிபர்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர், அளித்த நேர்காணலில், எந்த ஒரு நாடும் எவ்வாறு ஒரு முயற்சியில் பங்கேற்க வேண்டும், என்று அளவிடுவது ரஷ்யாவின் பணி இல்லை. பிற நாடுகளுடன் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு உறவும் எவருக்கும் எதிராக நண்பர்களை உருவாக்கும் விதமாக இருக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய விவாதம்… பிரதமர் மோடி பங்கேற்பு…!!!

ரஷ்யாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இன்று பங்கேற்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாடு ரஷ்ய தலைமையில் நடைபெறுகிறது. அதில் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற அந்த மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கொரோனா பாதிப்பு, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவது, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட […]

Categories

Tech |