ரஷ்யா-கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் அடிப்படையில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப்பாலம் சமீபத்தில் குண்டுவைத்து தகா்க்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. இதனையடுத்து உக்ரைனிலுள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் சென்ற 10ம் தேதி அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்தும் தலைநகா் கீவ் உட்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்யா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் முழுமையாக தடைபட்டு உள்ளது. […]
