கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாடுகளும் பேசி […]
