தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட […]
