ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 19-ஆம் தேதி பண்ணாரி சோதனை சாவடி அருகே சிறுத்தை சாலையை கடந்து சென்ற வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனால் வனத்துறை சோதனை சாவடி மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் ஒருவித பயத்துடன் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் இருக்கும் […]
