இட்லி வியாபாரி வீட்டின் கதவை திறந்து 20 கிராம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்துள்ள கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையா மனைவி மாரீஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு வழக்கம்போல இட்லி கடைக்கு சென்றுள்ளார். […]
