ஆக்லாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மீண்டும் 7 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் நியூசிலாந்து கொரோனாவை சாதுரியமாக சமாளித்து வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 2000 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போது 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. […]
