பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு […]
