பெரம்பலூர் அருகே ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பணத்தை வாகன சோதனையின்போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் சுரங்கம் மற்றும் கனிம துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் […]
