கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலை ஆறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் 9வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கிறது. இதையடுத்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கன அடி வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து […]
