இந்தியாவில் கார்டூன் உலகில் 50 வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் கே.ஆர்.லட்சுமணன். இவர் அரசியல்வாதிகளை தனது கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் தட்டி கேட்டார். அதாவது எளிய மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் நடவடிக்கை களையும் அவர்களது ஊழலையும், மதவாதத்தையும் நகைச்சுவையுடன் விமர்சித்துக் கார்ட்டூன்கள் வரைந்து புகழ்பெற்றார். இவர் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவசரநிலை அடக்குமுறைகளை எதிர்த்து கார்ட்டூன்கள் வரைந்திருந்தார். வியட்நாம் நாட்டின் மீது ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியபோது அதனை நையாண்டி […]
