கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது பல பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் […]
