சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம் பாடியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வீரவேல் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீரவேல் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதுடன் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் வீரவேல் குறித்து புகார் அளித்தனர். பின்னர் கோபத்தில் பெற்றோர்கள் […]
