கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட பள்ளி ஆய்வக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் கார்த்திக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.காவனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கார்த்திக்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடன் பிரச்சனையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கார்த்திக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை […]
