காவல்துறையினரிடம் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் முருகவேல் என்ற பைனான்ஸ் ராஜா வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் முருகவேல் மீது இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் முருகவேலை […]
