ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்(26). இவர் 2013ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் தேர்வாகி புதுப்பேட்டையில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சுரேஷ் பணிக்கு வரவில்லை. மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதுதொடர்பாக சக காவலர்கள் தொலைபேசி வாயிலாக கேட்ட போது […]
