ஆயுதங்களுடன் நடமாடிய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை காவல்துறையினருக்கு காரைக்குடி பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு கும்பல் வாள், பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மது அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் விளாரிக்காட்டு பகுதியில் வசிக்கும் கருப்பசாமி, அழகர், தேவா, மணிகண்டன், சின்ராசு […]
