குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத், கோவா உட்பட ஒரு சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதினால் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது. […]
