ஆப்கான் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறினார். மேலும் அவர் பணத்தை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரப் கனியின் விமானம் தஜகிஸ்தானில் […]
