ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் ஒருவர் தலிபான்கள் சுட்டதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் பைசல் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் சோதனைசாவடி ஒன்றில் தலிபான்கள் அவர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதன்பின் அவர்களை செல்லும்படி கூறி உள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வாலிபர் […]
