இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]
