திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியே தினசரி காலை 7:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை இந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்தான் மலைத் தோட்டங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கோள்கின்றனர். இதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கிடையில் தடியன் குடிசையிலிருந்து கருப்புசாமி கோயில் போகும் சாலை வரையிலும் […]
