பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று […]
