சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஜீவானந்தம் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசினார். மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்தவகையில் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் சேவைகளை இனி […]
