கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்திவருகின்றனர். ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, […]
