ஆன்லைன் செயலிகள் மூலம் பண மோசடி செய்த கும்பலை காவல்துறையினார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ஆன்லைன் மூலம் கடன் கொடுப்பதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். […]
