ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய […]
