ஒன்றுபட்ட ஆந்திராவின் ஹசுர்நகர் சட்டசபை தொகுதிக்கு சென்ற 2014ஆம் வருடம் நடந்த தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி இன்றி பேரணி நடத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த தொகுதி இப்போது தெலுங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தில் வருகிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி மீதான இந்த தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ஐதராபாத்திலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி உட்பட […]
