சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகா பள்ளியை சேர்ந்த பெண் புஷ்பா. கல்லூரி மாணவியான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணாவை அந்தப்பெண் மலை பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது கிப்ட் கொடுப்பதாக கூறிய அவர் கண்களை தனது துப்பட்டாவால் கட்டியிருக்கிறார். […]
