சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. […]
