ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹேமசந்திரன்(12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தின ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அதன் பிறகு மாலையில் வெகு நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போது அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். […]
