சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள். மேலும் அவருக்கு சுமார் 50 […]
