கர்நாடக போக்குவரத்து துறை வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபெர் போன்ற கைபேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபெர் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா […]
