ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணபாண்டியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், திருநீலகண்டர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சொர்ணபாண்டியன் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினருடைய ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அந்த ஆட்டோவில் தனது உறவினர்களான அதே ஊரில் வசிக்கும் ராமர், மந்திரமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார். […]
