வாலிபர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இதனைதொடர்ந்து அதே பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாஸ்கர் சுந்தரின் வீட்டிற்கு முன்பாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் சுந்தர் பாஸ்கரை கண்டித்ததோடு கல்லிடைகுறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
