ஆட்டோவில் மது பாட்டில்களை கடத்த முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகில் மாலையம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் சில மர்ம நபர்கள் ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு இருப்பதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை மர்மநபர்கள் பார்த்ததும் ஆட்டோவில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]
