கென்யா நாட்டில் தனித்துவிடப்பட்ட யானை குட்டிகளுக்கு ஆட்டுப்பால் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யா நாட்டில் உள்ள The Reteti என்ற யானைகள் காப்பகத்தில் யானை குட்டிகளுக்கு தண்ணீரில் ஆட்டுப் பால் பவுடர் கலந்து வழங்கப்படுகிறது. மேலும் அந்த காப்பகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் ஆட்டுப்பால் சுலபமாக ஜீரணமாவதாகவும் அதில் அதிக புரத சத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களுக்கு ஆடு வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், ஆட்டு பாலை பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய […]
