மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவது தொடர்கதையாக உள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளிய வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கடைகள் மட்டும் நேர […]
